Monday, January 25, 2010

தேர்த் திருவிழா

இது
ஒற்றைக்கரத்தின்
ஓங்கார வலிமையல்ல‌
ஊரே ஒன்று கூடி
ஓராயிரம் கரங்கள் ஒன்றிணைந்த‌
ஒற்றுமைத் திருவிழா.
ஒற்றுமையின் விளைவால்
பலநிகழ்வுகள் நடந்தேறுமென்பது
காலங்காட்டும் உண்மை
நிகழ்காலமே
வரலாற்றின் ஆதாரம் எனும்
வகைப்பாட்டின் அடிப்படையில்
இந்த பொன்னாளும் ஒருநாள்
வரலாறாகும்.

உடலில் குறையிருந்தாலும்
சிந்தையில் குறைவின்றி
செயலூக்கம் கொண்டிருக்கும்
எங்களவர் வார்த்தைகள்
அச்சேறும் அற்புத தினம்
இன்று.

இந்த
'கவிச்சிதறல்' திருவிழாவில்
தேர்செல்ல துணைநின்ற‌
அருமைக்கவிஞ‌ர்களுக்கும்
அன்பு உள்ளங்களுக்கும்
நெஞ்சுருக சமர்ப்பிக்கிறேன் ‍‍‍
ஓராயிரம் நன்றிகளை!

''நம்பிக்கை நாயகன்" கவிஞர் ஏகலைவன்
சேலம்

No comments:

Post a Comment