கனவு வாழ்க்கை போதுமெனக்கு...
கண் பார்வையிழந்து
கடந்தன இருபது ஆண்டுகள்
என்றாலும்
என் பாட்டியை ஒருநாள் இரவு பார்த்தேன்
நாற்பதாண்டுகளுக்கு முன் மறைந்தவள்!
அதே முகம், அஹ்டே கனிவு
அதே சிவந்த நிறம் மறுநாள்
எனக்குள் கொள்ளை மகிழ்ச்சி.
இன்னொரு நாள் கனவில்...
இருபதாண்டுகளுக்குமுன் மருத்துவமனையில்
என்னைச் சேர்த்தபொழுது கண்ணீர்விட்ட
என் தந்தை வந்தார்.
இறுக்கமான மனிதருக்குள் எத்தனை அன்பு
எனக்குள் இன்னும்
மிச்சமிருக்கிறது அவர் ஆளுமை
அவரின் தந்தைபேறு
என் தவம்
இன்னொரு நாள் கனவில் என் தாய்...
என்னோடு சேர்த்து
எட்டுக்குழந்தைகளை ஆளாக்கியவர்.
எத்தனை வதைகள்,எத்தனை வேதனைகள்
எல்லாமே நான் பார்க்க அனுபவித்தவை
அருகில் வைத்து தடவிக்கொடுத்தார் என்னை
கண்ணீர் விட்டேன் கனவிலும்...
எனக்குள் உயிர்ப்பாய்
இன்றும் இவர்கள்
கனவுக் காட்சிகள் போதும்
எனக்கு...
கவிஞர் கோவை ஞானி
No comments:
Post a Comment