Saturday, January 23, 2010

புதிய கண்ணகி

அரசின்
கருணைத் தொகைக்காக‌
அலையாயலைந்தாள்
அந்த விதவை

கையெழுத்துக்கள்
பல வாங்கிக் கொடுத்தாள்

கடைசியில்
அந்தப் பணமும் வந்தது
பணத்தை கொடுத்த‌
அலுவலர் கை நீட்டினார்...

நீயும்
விதவை தானா?
அவன் முகத்தில்
விசிறியடித்தாள்
பணத்தை...

கவிஞர் கர்ணன்
மதுரை.

No comments:

Post a Comment