Saturday, January 23, 2010

நவீன வேதாளங்கள்

செல்லப் பிராணிகளென‌
காதலுடன்
போற்றி வளர்க்கப்படுகின்றன‌
நவீன வேதாளங்கள்

இப்போதெல்லாம்
அவசியம் தேவைப்படுகின்றன‌
வேதாளங்கள்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விஷயத்துக்காக‌

தலை வலித்தாலும்'
சுமை கனத்தாலும்
விதவிதமாய் சேட்டைகள் செய்தாலும்
விடாது சுமக்கின்றோம்
வேதாளங்களை
விக்ரமாதித்தன் போல...

வேதாளங்களின் தனிச்சிறப்பு
அவைகளுக்கு
எம்மரமும்
எம்மனிதரும்
சம்மதமே

கவிஞர் கோ.கண்ணன்
தர்மபுரி

No comments:

Post a Comment