நவீன வேதாளங்கள்
செல்லப் பிராணிகளென
காதலுடன்
போற்றி வளர்க்கப்படுகின்றன
நவீன வேதாளங்கள்
இப்போதெல்லாம்
அவசியம் தேவைப்படுகின்றன
வேதாளங்கள்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விஷயத்துக்காக
தலை வலித்தாலும்'
சுமை கனத்தாலும்
விதவிதமாய் சேட்டைகள் செய்தாலும்
விடாது சுமக்கின்றோம்
வேதாளங்களை
விக்ரமாதித்தன் போல...
வேதாளங்களின் தனிச்சிறப்பு
அவைகளுக்கு
எம்மரமும்
எம்மனிதரும்
சம்மதமே
கவிஞர் கோ.கண்ணன்
தர்மபுரி
No comments:
Post a Comment