Saturday, January 23, 2010

உள்ளத்தின் உராய்வுகள்

உள்ளார்ந்த‌
துயரங்களையெல்லாம்
உதறி எறிந்துவிட்டால்
ஒன்றுமே இல்லாமல்
போய்விடுமென்கிற‌
அச்சத்தில்தான்
அப்படியே வைத்திருக்கிறேன்
ஆறாத தழும்புகள்
சிலவற்றையும்...

கவிஞர் த.நளினி
மதுரை

No comments:

Post a Comment