Saturday, January 23, 2010

நீயும் ஆண்டவன் தான்...

சுழி போட்டு
செயல் தொடங்கும்
விநாயகப் பெருமான்
முழுமுகம் இல்லாதவன்

ஜாதகத்தில்
உச்சத்தில் நன்மையாம்
குரு தட்சிணாமூர்த்தி
ஒரு கால் இல்லாதவன்

சகல் காரியமும்
நடக்க வைக்கும்
சண்டீகேசுவரன்
இரு காது கேட்காதவன்

ஒரு
அவதாரத்தில்
அம்மன் கூட‌
விகாரமானவள்

அட விடுங்கள்
அகிலத்தையே
ஆட்சி நடத்துவதாய் கூறும்
சிவன் கூட‌
அர்த்தநாரீஸ்வரர்

ஊனமானவனே!
உரக்கச் சொல்கிறேன்
நீயும் ஆண்டவன் தான்
உயர்ந்த இடத்தில் இருப்பதால்...

அரசு ஆணைப்படி
நீ மாற்றுத்திறானுடையவன் மாற்றானை விட நீ திறமையானவன்

பிறகெதற்கு
ஊனத்தை பற்றி
ஒப்பாரி வைக்கிறாய்
நன்றாக
உழைத்து எரி
உன் தீபத்தில்
உலகம் ஒளி பெறட்டும்

கவிஞர் கவி.பெரியசாமி
கரூர்

No comments:

Post a Comment