உடலை உறுதியாக்கு
மனதைக் கல்லாக்காதே!
மனதைக் கல்லாக்காதே!
கடற்கல்லாக இருந்து
கரைந்தது போதும்
துவைக்கல்லாக இருந்து
அழுக்கு நீக்கு! அசுத்தம் போக்கு!
மலைக்கல்லாக இருந்து
மணலானது போதும்
சிலைக்கல்லாக இருந்து
சித்திரம் மீட்டு! விசித்திரம் கூட்டு!
மாணிக்கக் கல்லாக இருந்து
மரியாதை பெற்றது போதும்.
வைரக்கல்லாக இருந்து
வைராக்யத்துடம் வளர்க!
மதிப்புடன் வாழ்க!
சொற்கள் பலவகை
நீண்டு காவியமாகலாம்
கற்கள் பலவகை
சிலை ஓவியமாகலாம்
ஆதலினால் தோழனே
நீ சொல்லாக இருந்தால்
இதழைக் கனிவாக்கிக் கொள்
கல்லாக இருந்தால்
உடலை உறுதியாக்கிக் கொள்
ஆனால்
'கல்' மனசுக்காரன் என்று
'சொல்'லுமளவிற்கு
மனதை மட்டும் கல்லாக்காதே!
கவிஞர். பொன்.கதிரேசன்
நாமக்கல்
No comments:
Post a Comment