Saturday, January 23, 2010

ஆதலால் அழிவில்லை

நீ
இறந்துவிட்டதாக
செய்தி வந்தது
ஆனாலும்
நான் அழவில்லை

காரணம்
ஒவ்வொருநாளும் நானும்
இறந்து கொண்டிருக்கிறேன்
என் இறப்பிற்கே
அழ முடியாத நான்
உன் இறப்பிற்கு எப்படி அழ?

கருவிலே இறந்து
குழந்தையாக பிறந்து
குழந்தையாக இறந்து
சிறுவனாக பிறந்து
சிறுவனும் இறந்து
இளைஞனாய் பிறந்தேன்.
இளைஞனும் இறந்த பிறகு
முதியவனும்
இறந்து கொண்டிருக்கிறேன்.

இப்படி
நாளும் இறந்து கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு இறப்பிற்கும்
அழுவதென்றால் வாழ்நாளெல்லாம்
அழுகையே தொடரும்
ஆதலால் என்னை மன்னித்துவிடு...

மரணம் என்பது மறைவல்ல‌
மாற்றம்... என்பதனால்
உன் இறப்பிற்கு நான் அழவில்லை.

கவிஞர் இராமானந்த குருஜி
விழுப்புரம்

No comments:

Post a Comment