நட்பு
துயரத்தில்
தோள் கொடுப்பது நட்பு
துவண்டு விழும்போது
தூக்கி விடுவது நட்பு
விழி நிறைந்த கண்ணீர்
வழியும் முன்பே
தாங்கி பிடிப்பது நட்பு
உடைந்த இதயங்களுக்கு
உறுதுணையாய் வருவது நட்பு
இத்தனையும் உணர்ந்த
நமக்கு சிறப்பு
நல்ல நண்பர்கள் சூழ வாழ்வதே!
கவிஞர் ஆ. தங்கராஜீ
சேலம்
No comments:
Post a Comment