Saturday, January 23, 2010

ஐம்பூதங்களும், ஐம்புலன்களும்

யாருமற்ற வெளிகளில்
காற்றுடன் உரையாடினேன்
வேறுபட்ட நட்புடன்
பொழுதும் கழிந்தது சிறு
சத்தம் வரவில்லை

புஞ்சை நிலப்பரப்பில்
கொஞ்சம் காலூன்றினேன்
அதிகாலை வானம்
பனியும் பொழிந்தது என்
காலுக்கு வலிக்கவில்லை...

கலங்கிய கண்மாயில்
கால்கள் நனைத்தேன்
பாசம் தின்னும் மீன்கள்
விரல்கள் கடித்தது அதன்
வண்ணம் தெரியவில்லை...

கண்ணாஇக் கூசும்
சூரிய வெப்பம்
மண்ணைப் பிளக்கும்
விதையின் நுட்பம்
ஏன்? எதற்கு? எப்படி? எதுவும்
எனக்கு புரியவில்லை...

கால்களற்று... பார்வையற்று...
கேட்கும், பேசும் திறனற்று... சுய உணர்வற்று...
போனபின்பும் அற்றுப் போகவில்லை
ஐபூதங்களுக்கும், ஐம்புலன்களுக்குமான
எங்களின் உறவு...

இங்கே
இதயங்கள் பேசிக் கொள்கின்றன.

கவிஞர் சு. அமுதசாந்தி
மதுரை

1 comment: