Saturday, January 23, 2010

மறைக்காமல் சொல்லிவிடு

மனதுக்குள் வைத்துக்
கொண்டு மறைக்கின்றாய்
மறைத்ததை நீயே
மகிழ்ந்து ரசிக்கின்றாய்
தினம் தினம் ஏனிந்த விளையாட்டு
தெரியாமல் தான் கேட்கின்றேன்
சொன்னால் என்ன?

என்னை
காணாமல் வாடுகின்றாய்
கண்டவுடம் ஏன்
விலகி ஓடுகின்றாய்
இனம் புரியாத இன்பம்
இதில் இருக்கிறதா?
இல்லை உண்மையிலேயே
உன் மனம் என்னை வெறுக்கிறதா?

பணம் கொடுத்து கிடைப்பது
உண்மை அன்பில்லை
பகிர்ந்து கொண்டால்
ஏதும் பாவமில்லை.
குணம் கொண்ட‌
நல்லவளே சொல்லிவிடு
சொல்லாமல் செல்வதில்
ஏதும் லாபமுண்டோ!

கவிஞர் சி.எழில் அரசன்
சென்னை

No comments:

Post a Comment