Saturday, January 23, 2010

பிரசவ வேதனை

ஆண்டவனே
பிரசவ வேதனையை
பெண்களுக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்?

அக்னி சாட்சியாக‌
இன்ப துன்பங்களை
பகிர்ந்து வாழ்கிறோம் என்று
சங்கல்பம் கொண்டதை
நீயே பொய்த்து விட்டாயே?

அன்பின் வெளிப்பாட்டில்
ஒரு அராஜகமா?
ஆசை முத்தத்திற்கு
ஆயுள் தண்டனையா?

இறைவா
சிசுவை வெளிகொணர‌
அகிம்சை வழிகளை சிருஷ்டிக்க‌
ஏன் மறந்தாய்?

அடுத்த ஜென்மத்தில்
என்னை பெண்ணாகவும்
அவளை எனக்குரிய ஆணாகவும்
படைப்பாய் ஆணடவனே!

அவளிடம்
இதனை சொல்லிவிடாதே
அவள் என்ன சொல்வாள் என்று
நான் கூறவும் வேண்டுமா?

கவிஞர் வெ. எழிலரசன்
சேலம்

No comments:

Post a Comment