Saturday, January 23, 2010

பாசக்கடன்

தங்கையின் திருமணக் கடனை
கட்டி முடிப்பதற்குள்
வந்தது தீபாவளி

மாப்பிள்ளைக்கு
அரைபவுன் மோதிரம்
பட்டாசு
பலகாரம் என‌
சகல மகிழ்ச்சியுடன்
முடிந்தது தீபாவளி

தங்கை சென்றாள் கணவனுடன்
வீட்டிற்கு வந்து
தனிமையில் அமர்ந்து
யோசித்தான் அண்ணன்
வீட்டை மீட்பது
எப்போது என்று...

கவிஞர் செ. முருகேசன்
நாமக்கல்

No comments:

Post a Comment