பாசக்கடன்
தங்கையின் திருமணக் கடனை
கட்டி முடிப்பதற்குள்
வந்தது தீபாவளி
மாப்பிள்ளைக்கு
அரைபவுன் மோதிரம்
பட்டாசு
பலகாரம் என
சகல மகிழ்ச்சியுடன்
முடிந்தது தீபாவளி
தங்கை சென்றாள் கணவனுடன்
வீட்டிற்கு வந்து
தனிமையில் அமர்ந்து
யோசித்தான் அண்ணன்
வீட்டை மீட்பது
எப்போது என்று...
கவிஞர் செ. முருகேசன்
நாமக்கல்
No comments:
Post a Comment