எனது தாய்
கருவறையில் சுமந்தாய்
உலகினுக்கு தந்தாய்
கண்போல் வளர்த்தாய்
அன்பினை அள்ளித்தந்தாய்
துன்பத்தை சுமந்தாய்
உறக்கத்தை துறந்தாய்
பண்பினை கொடுத்தாய்
பகைமையை மறந்தாய்
பாரினில் உயரச்செய்தாய்
உன்போல் எவரிருப்பர்
உலகினிலே என்றுமே
துணையிருப்பாய்
என் தாயே!
கவிஞர் இரா. செல்வராஜ்
தேனி
No comments:
Post a Comment