Saturday, January 23, 2010

எனது தாய்

கருவறையில் சுமந்தாய்
உலகினுக்கு தந்தாய்
கண்போல் வளர்த்தாய்
அன்பினை அள்ளித்தந்தாய்

துன்பத்தை சுமந்தாய்
உறக்கத்தை துறந்தாய்
பண்பினை கொடுத்தாய்
பகைமையை மறந்தாய்
பாரினில் உயரச்செய்தாய்

உன்போல் எவரிருப்பர்
உலகினிலே என்றுமே
துணையிருப்பாய்
என் தாயே!

கவிஞர் இரா. செல்வராஜ்
தேனி

No comments:

Post a Comment