Saturday, January 23, 2010

சுழற்சி

அமைதியாய் தோன்றி
ஆர்பரித்து பாய்ந்து
இடையூறு களைந்து
ஈகையாய் வழங்கி
உற்சாகமாய் ஓடி
ஊர்பல கரந்து
எழிலாய் கடலோடு கலந்து
ஏற்றத்தோடு சூரிய ஒளியில்
ஐயமின்றி விண்ணை அடைந்து
ஒன்று விடாது மழையாக‌
ஓசையுடன்
ஒளவை போல வாரி வாரி
வழங்குகின்றாய்...

கவிஞர் ஜி.ஏ. பிரிட்டோ
கன்னியாகுமரி

No comments:

Post a Comment