சுழற்சி
அமைதியாய் தோன்றி
ஆர்பரித்து பாய்ந்து
இடையூறு களைந்து
ஈகையாய் வழங்கி
உற்சாகமாய் ஓடி
ஊர்பல கரந்து
எழிலாய் கடலோடு கலந்து
ஏற்றத்தோடு சூரிய ஒளியில்
ஐயமின்றி விண்ணை அடைந்து
ஒன்று விடாது மழையாக
ஓசையுடன்
ஒளவை போல வாரி வாரி
வழங்குகின்றாய்...
கவிஞர் ஜி.ஏ. பிரிட்டோ
கன்னியாகுமரி
No comments:
Post a Comment