Saturday, January 23, 2010

எனக்கான இலக்கு

இலக்கு நோக்கிய எனக்கான பயணம்
எதையும் அடையவில்லை
எதிலும் நிறைவில்லை

எதைத்தேடிப் பயனிக்கிறது
என்பதே புரியாமல்
பயணப்படுகிறது என் கால்கள்...
பயணத்தில் தேடுதலுக்கான‌
விடைமட்டுமே தேடலாகிறது.

இலக்கின் தூரம்
நெருங்கியதாய் எண்ணி
எட்டித்தொட எத்தனிக்கையில்
இடறி விழுந்தாலும்
சிந்தனை மட்டும்
தேடுவதிலேயே நிற்கிறது.

திசை தெரியா
என் இலக்கின் பயணத்தில்
சிக்கி சின்னாபின்னப்படுகிறது
என் சுற்றம்... வழிப்பயண‌
ஊன்றுகோலாய் வருமென நினைத்த‌
நட்புகள் நடுவழியில் விட்டுவிட்டு
நழுவி மாயமாகின்றன.

நேர்கோட்டுத் தேடுதலில்
விழுந்து எழுந்தாலும்
இடரின் காலத்தில்
எதையும் எதிர்கொள்ளும்
வீரியத்தின் விளைவே நம்பிக்கை.

கவிஞர் சித்தை பா.பார்த்திபன்
திண்டுக்கல்

No comments:

Post a Comment