Saturday, January 23, 2010

நாங்கள் வெல்வோம்

பார்வை இழந்தவர்கள் பார்க்கிறார்கள்
கால்கள் இல்லாதவர்கள் நடக்கிறார்கள்
பேசமுடியாதவர்கள் பேசுகிறார்கள்
கேட்கமுடியாதவர்கள் கேட்கிறார்கள்

எந்த ஏசுபிரானும்
இந்த அற்புதத்தை நிகழ்த்தவில்லை
எங்கள் சகோதர சகோதரிகளின்
தன்னம்பிக்கையால்தான்
எல்லாம் சாத்தியமாயின.

ஒவ்வொரு மனிதனையும்
உரசிப்பார்த்தால்
ஒளிந்திருக்கும்
ஆயிரம் ஆயிரம் ஊனங்கள்
எங்களையும்
அப்படி சிறுமைப்படுத்தாதீர்கள்
நாங்கள் நம்பிக்கையானவர்கள்

ஏனெனில்,
ஊனமாகி போன‌
இந்த தேசத்திலும்
உயிர்ப்போடு இருப்பது
ஊனமுற்றவர்களின் உணர்வுதான்

கவிஞர் ப.லெனின்
திருச்சி

No comments:

Post a Comment